• காஞ்சிபுரம் மாவட்டம் மாத்தூர் ஊராட்சியில் சிசிடிவி கேமராவை அதிமுக நிர்வாகிகள் அடித்து உடைத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
• மாத்தூர் அதிமுக கிளை செயலாளர் மனோகரன் மற்றும் அதிமுக ஒன்றிய பொறுப்பாளர் மோகன் ஆகியோர், இந்திரா நகர் நுழைவு வாயில் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை அடித்து நொறுக்கி உள்ளனர்.
• இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி, ஊராட்சி நிர்வாகம் சார்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.