தற்போதைய செய்திகள்

திமுக நகர மன்ற தலைவரின் காரை உருட்டுகட்டையால் அடித்து நொறுக்கிய இளைஞர்.. பெண் பணியாளர்களிடம் மட்டும் குறைகளை கேட்டதால் ஆத்திரம்

தந்தி டிவி
• கள்ளக்குறிச்சியில் பெண் தூய்மை பணியாளர்களிடம் மட்டும், குறைகளை கேட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில், திமுக நகர மன்ற தலைவரின் அரசு காரை அடித்து நொறுக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். • விளம்பார் கிராமத்தை சேர்ந்த இளைஞர் அமர்நாத், கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் டெங்கு கொசு புழு ஒழிப்பு பணியாளராக பணி செய்து வந்துள்ளார். • இந்நிலையில் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோரை அழைத்த நகராட்சி ஆணையர் குமரன், நகர மன்ற தலைவர் சுப்புராயலு முன்னிலையில் கூட்டம் நடத்தி அனைவருக்கும் பிரியாணி விருந்து அளித்துள்ளார். • இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞர் அமர்நாத் திடீரென உருட்டு கட்டையை எடுத்து வந்து நகராட்சி அலுவலகத்திற்கு வெளியே நின்றிருந்த திமுக நகர மன்ற தலைவர் சுப்புராயிலுவின் அரசு காரை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளார். • இந்த சம்பவத்தை கண்ட நகராட்சி அலுவலகத்தில் இருந்தவர்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி காவல் நிலைய போலீசாரை வரவழைத்து இளைஞர் அமர்நாத்தை போலீசில் ஒப்படைத்தனர். • போலீசார் அமர்நாத் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். • விசாரணையில், நகராட்சி ஆணையர் குமரன் பெண் பணியாளர்களை மட்டும் அழைத்து பேசுவதாகவும், ஆண் பணியாளர்களை அழைத்து பேசவில்லை என்ற அதிருப்தி காரணமாகவே காரை அடித்து நொறுக்கியதாக தெரிய வந்துள்ளது.

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு

BREAKING || பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க CM உத்தரவு