• கள்ளக்குறிச்சி அருகே, வங்கிகளில் போலி ஆவணங்கள் கொடுத்து 24 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, தந்தை, மகன் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
• சின்னசேலம் கூகையூர் அருகே, ஆயில் மில் நடத்தி வரும் பெரியசாமி என்பவர், தனியாருக்கு சொந்தமான குடோன்களை வாடகைக்கு எடுத்து, வங்கிகளில் 24 கோடி ரூபாய்க்கும் மேல் கடன் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
• இது தொடர்பாக, குடோன் உரிமையாளர் ஜெயராமன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
• அதில், கள்ளக்குறிச்சியில் 36 குடோன்களை வாடகைக்கு எடுத்த பெரியசாமி, சின்னசேலம் பகுதியில் உள்ள தனியார் வங்கிகளில் போலி ஆவணங்கள் மூலம் 24 கோடியே 33 லட்சம் ரூபாய் கடன் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது.
• இதையடுத்து, பெரியசாமி, அவரது மகன் பாலுசாமி உள்பட நான்கு பேரை கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.