தற்போதைய செய்திகள்

காதலனை மறக்க பெண்ணிற்கு மாந்தீரிகம் - கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

தந்தி டிவி

கள்ளக்குறிச்சியில், காதலனை மறக்க மாந்தீரிகம் செய்யப்பட்ட பெண், வீட்டிலிருந்து தப்பி, காதலனை திருமணம் செய்து, காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் நடந்துள்ளது.

சின்னசேலம் அருகே உள்ள பால்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீராமகிருஷ்ணனும் திரைசந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீயும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இந்த காதல் விவகாரம், பெண்ணின் வீட்டிற்கு தெரியவந்ததை அடுத்து, கல்வராயன் மலைக்கு ஜெயஸ்ரீயை அழைத்துச் சென்று, காதலனை மறக்க மாந்தீரிகம் செய்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அதனை ஏற்காத ஜெயஸ்ரீ, வீட்டிலிருந்து வெளியேறி, தேங்காய்நத்தம் மாரியம்மன் கோயிலில், காதலனை திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் இருவரும் பாதுகாப்பு கேட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட காவல் கண்காணிப்பாளர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில், இருவரும் அங்கிருந்து சென்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ