தற்போதைய செய்திகள்

"உயிரோடு இருக்கும்போதே இறந்ததாக பதிவு"... மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் - "தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?"

தந்தி டிவி
• சங்கராபுரம் அடுத்த வடபென்பரப்பி எல்லைக்கு உட்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில், தொடர்ந்து முறைகேடுகள் நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். • அந்த வகையில், இளையாங்கண்ணி கிராமத்தை சேர்ந்த குழந்தை இயேசு என்ற முதியவர் உயிரோடு இருக்கும் போதே, அவர் இறந்ததாக ஆவணங்களை வைத்து பத்திரப்பதிவு செய்துள்ளதக கூறப்படுகிறது. • இதனால் ஆத்திரம் அடைந்த முதியவர், சார் பதிவாளர்கள் அலுவலகத்தில் இதுகுறித்து கேட்டபோது, அதிகாரிகள் உரிய பதில் தரவில்லை என சொல்லப்படுகிறது. • அதுமட்டுமல்லாமல், 10க்கும் மேற்பட்ட கிராமங்களில், போலியான ஆவணங்களை வைத்து பத்திரப்பதிவு செய்ததாக அந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். • இந்த மோசடியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மீது, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு