தற்போதைய செய்திகள்

"மின் வாரியத்தில் வேலை" - சென்னையில் நடந்த மெகா மோசடி

தந்தி டிவி

சென்னையில், மின்சார வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 61 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை முகலிவாக்கத்தை சேர்ந்த மோகன் என்பவரின் குடும்பத்தில் உள்ள இளைஞர்கள் மின்வாரியத்தில் வேலைக்கு சேர முயற்சித்து வந்துள்ளனர். அப்போது, 3 பேர் கொண்ட கும்பல் மோகனை தொடர்பு கொண்டு, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதை நம்பி, 10 பேர் 61 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளனர். அதன்பின்னர், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலமாக நேர்முகத்தேர்வு நடத்துவது போன்று நாடகமாடி, போலி பணி நியமன ஆணையும் வழங்கியுள்ளனர். தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து பணத்தை கேட்டதற்கு, பணம் தரமுடியாது எனக்கூறி அந்த கும்பல் மிரட்டியுள்ளது. இதனால், கடந்த 23ஆம் தேதி ஆவடி காவல் ஆணையரகத்தில் மோகன் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய மத்திய குற்ற பிரிவு போலீசார், மோசடியில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்தனர். பின்னர், பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படடு புழல் சிறையில் அடைத்தனர். 

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு