தற்போதைய செய்திகள்

நகை வாங்குவது போல் நடித்து நைசாக பாக்கெட்டுக்குள் சுருட்டிய நபர் - பரபரப்பு சிசிடிவி காட்சி

தந்தி டிவி

மார்த்தாண்டத்தில், நகை வாங்குவது போல் நாடகமாடி ஒன்றே கால் சவரன் நகையை திருடி சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். காப்புகாடு பகுதியை சேர்ந்த விஜூ என்பவர், மார்த்தாண்டம், குன்னத்தூர் பகுதிகளில் நகைக் கடை நடத்தி வருகிறார். நகைகளை சரிபார்த்த போது, 10 கிராம் நகை குறைவாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த விஜூ, சிசிடிவி காட்சிளை ஆய்வு செய்தார். அதில், நகை வாங்குவது போல் நாடகமாடிய அடையாளம் தெரியாத இருவர், நகையை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது. மேலும், குன்னதூரில் உள்ள மற்றொரு கடைக்கும் சென்று கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். இது தொடர்பான வழக்குப் பதிவு செய்த மார்த்தாண்டம் போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Manamadurai case | மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கில் திருப்பம்.. சரமாரியாக கேள்வி கேட்ட நீதிபதிகள்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''