தற்போதைய செய்திகள்

ஜெயலலிதாவின் கன்னத்தில் இருந்த புள்ளிகள் குறித்து எம்பாமிங் செய்த மருத்துவர் விளக்கம்

தந்தி டிவி

ஜெயலலிதா இறந்த தேதி விவகாரத்தில் எம்பாமிங் செய்த மருத்துவர் சொன்ன தகவல் முக்கியம் பெற்றுள்ளது. 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்ததாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால் அவரது உயிரிழப்பு குறித்து விசாரித்த ஆறுமுகசாமி ஆணையம் 2016 டிசம்பர் 4 ஆம் தேதியே ஜெயலலிதா உயிரிழந்துவிட்டார் என தெரிவித்துள்ளது.

ஜெயலலிதா மரணம் அறிவிக்கப்பட்ட போது, மரணம் குறித்த சர்ச்சைகள் எழுந்தன. அவைகளை களையும் வகையில் 2017 பிப்ரவரியில் மருத்துவ குழு செய்தியாளர்களை சந்தித்து பேசியது. அப்போது ஜெயலலிதா உடலுக்கு எம்பாமிங் செய்த மருத்துவரும் அப்போதைய எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருமான சுதா சேஷய்யன், ஜெயலலிதா உடலில் எந்த துளையும் இருக்க வாய்ப்பு இல்லை என விளக்கம் அளித்திருந்தார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"