தற்போதைய செய்திகள்

ஜல்லிக்கட்டு விவகாரம் நடத்தலாமா..? - ஆதரவாகவும், எதிராகவும் குரல் எழுப்பிய மக்கள்.. கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு

தந்தி டிவி
• திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் வாக்குவாதம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. • பொங்கலூர் ஒன்றியம் அழகுமலை ஊராட்சி சிறப்பு கிராம சபா கூட்டம் வேலாயுதம்பாளையத்தில், அதன் தலைவர் தூய மணி தலைமையில் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற அலுவலர்கள், அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர். • அழகுமலையில் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டிகளால் சுற்றுப்புற சுகாதாரம் சீர்கேடு அடைந்து விட்டதாகவும், விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி ஒரு தரப்பினர் முழக்கங்கள் எழுப்பினர். • அப்போது மற்றொரு தரப்பைச் சேர்ந்த சிலர், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழக்கமிட்டனர். • அப்போது, அங்கிருந்த போலீசார் இரு தரப்பினரையும் சமரசம் செய்தனர். • பின்னர் பேசிய ஊராட்சி தலைவர் தூய மணி, ஜல்லிக்கட்டு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், இது குறித்து மாவட்ட ஆட்சியர் தான் முடிவு எடுக்க வேண்டும் என்றும், இதுவரை அறிவிப்பு வராததால் போட்டி நடைபெற வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை