தற்போதைய செய்திகள்

ஜே.பி.நட்டாவுக்கு கல்லறை எழுப்பி பூக்கள் தூவிய மர்ம நபர்கள் - தெலங்கானாவில் பரபரப்பு சம்பவம்

தந்தி டிவி

முனுகோடே எனும் பகுதியில் சாலையில் நடுவில் குழி தோண்டி கல்லறை எழுப்பிய மர்ம நபர்கள் அதன் மீது பூக்கள் தூவி ஜே.பி.நட்டாவின் படத்தை அங்கு வைத்துள்ளனர்.

உயிருடன் இருக்கும் போதே ஜீ பி நட்டாவுக்கு கல்லறை அமைத்த விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள தெலங்கானா பாஜகவினர், ஆளும் தெலுங்கானா ராஷ்டிர ஸமிதியை விமர்சித்துள்ளது.

கல்லறையின் மீது ஃப்ளூரைடு குறைப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் என்ற பெயரும் இடம் பெற்றுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சராக நட்டா இருந்த போது தெலங்கானாவில் ஃப்ளூரைடு குறைப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்ததாகவும், இன்று வரை அது நிறைவேற்றப்படாததால் அதை அவருக்கு நினைவுபடுத்தும் வண்ணம் மர்ம நபர்கள் சிலர் இந்த செயலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இது குறித்து எந்த விதமான புகாரும் அளிக்கப்படாத போதும் காவல் துறையினர் இந்த கல்லறையை அகற்றியுள்ளனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்