தற்போதைய செய்திகள்

"விடிய விடிய இந்த கூத்து தான்.. உயிரை கையில பிடிச்சிட்டு இருக்கோம்" - கதறும் மக்கள்

தந்தி டிவி

சேலம் மாவட்டம் வெத்தலைக்கரனூரில் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் இந்த கல்குவாரியில் பாறைக்கு வெடி வைத்து தகர்த்துள்ளனர். அப்போது சிதறிய கற்கள் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து, வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டதாகவும், இரண்டு சிறுவர்களுக்கும் கால்நடைகளுக்கும் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், கல் குவாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கல்குவாரியிலிருந்து விழும் கற்களால் வீடுகளில் விரிசல் ஏற்படுவதாகவும், கால்நடைகள் உயிரிழப்பதாகவும் அப்போது அவர்கள் குற்றஞ்சாட்டினர். உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமல் குவாரி செயல்பட்டு வருவதாகவும் கூறிய அவர்கள், இதுதொடர்பாக பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்ததோடு, குவாரியை உடனடியாக மூட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி