தற்போதைய செய்திகள்

IT அதிகாரிகள் கார் கண்ணாடி உடைப்பு... "உரிய பாதுகாப்பு அளிக்காத எஸ்பி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" - ஜெயக்குமார்

தந்தி டிவி

வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்காத எஸ்பி மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கரூரில் சோதனை நடத்த வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் திமுகவினரின் எதிர்ப்பால் அதிகாரிகளால் தொடர்ந்து சோதனை செய்ய முடியாத சூழல் உருவானது. இந்நிலையில், சென்னை பழைய வண்ணாரப் பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்காத கரூர் எஸ்.பி மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு