தற்போதைய செய்திகள்

புதிய நாடாளுமன்றத்தில் நடைபெறுகிறதா மழைக்கால கூட்டத்தொடர்?

தந்தி டிவி

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், வரும் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர், வரும் மாதத்தின் 17 அல்லது 20 ஆம் தேதியில் தொடங்கி, ஆகஸ்ட் 10 ஆம் தேதி முடிவடையும் என தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்நாத் சிங் தலைமையிலான நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, ஓரிரு நாட்களில் மழைக்கால கூட்டத்தொடருக்கான இறுதி தேதியை முடிவு செய்யவுள்ளது. இந்த மழைக்கால கூட்டத்தொடரை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே மழைக்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் கலவரம், விலைவாசி உயர்வு, பொது சிவில் சட்டம் உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்ப, எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.   

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ