தற்போதைய செய்திகள்

புதிய நாடாளுமன்றத்தில் நடைபெறுகிறதா மழைக்கால கூட்டத்தொடர்?

தந்தி டிவி

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், வரும் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர், வரும் மாதத்தின் 17 அல்லது 20 ஆம் தேதியில் தொடங்கி, ஆகஸ்ட் 10 ஆம் தேதி முடிவடையும் என தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்நாத் சிங் தலைமையிலான நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, ஓரிரு நாட்களில் மழைக்கால கூட்டத்தொடருக்கான இறுதி தேதியை முடிவு செய்யவுள்ளது. இந்த மழைக்கால கூட்டத்தொடரை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே மழைக்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் கலவரம், விலைவாசி உயர்வு, பொது சிவில் சட்டம் உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்ப, எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.   

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்