தற்போதைய செய்திகள்

“வீடு வாடகைக்கு இருக்கா?“ சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - தாயை காக்க மகன் செய்த செயல்

தந்தி டிவி

சென்னை ஈக்காட்டுதாங்கல் பகுதியை சேர்ந்த சொர்ணாதேவி என்ற மூதாட்டியின் வீட்டிற்கு சென்ற 2 பேர், வீடு வாடகைக்கு வேண்டும் என கேட்டுள்ளனர். அப்போது திடீரென மூதாட்டியை தாக்கி, கத்தியை காட்டி மிரட்டி, கழுத்தில் கிடந்த தங்க செயின், வளையல், மோதிரம் என 8 சவரன் நகைளை, மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இதுதொடர்பான புகாரின் பேரில், சிசிடிவி காட்சி உதவியுடன், கோயம்புத்தூரை சேர்ந்த அஜித் மற்றும் பிரபு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அதில், அஜித்தின் தாய், டி.பி. நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சைக்கு பணம் இல்லாததால், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரியவந்தது. 2 பேரிடம் இருந்தும் கொள்ளையடித்த 8 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர்.

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி