தமிழகத்தில் எங்கேயும், ஒரே ஒரு நாள் லஞ்சம் இல்லாத ஆட்சி நடத்த முடியுமா என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். சிவகங்கையில், பாஜக அரசின் சாதனை விளக்கக் கூட்டம் நடைபெற்றது. அதில், பங்கேற்று பேசிய அண்ணாமலை, கடந்த முறை பொங்கல் தொகுப்பு பொருள்களை வழங்கிய நிறுவனம்தான், 24 லட்சம் கர்ப்பிணி பெண்களுக்கு, தரமில்லாத ஊட்டச்சத்து உணவை இந்த ஆண்டு வழங்கியதாக குற்றம்சாட்டினார். ஆவின் நிறுவனம் ஊட்டச்சத்து உணவு கொடுக்க முன்வந்தபோது, அதை ஏற்கவில்லை என சாடிய அண்ணாமலை, திமுக அரசால் ஒருநாள் லஞ்சம் இல்லாத ஆட்சி நடத்த முடியுமா ? என சாவல் விடுத்துள்ளார்.