தற்போதைய செய்திகள்

ஐபிஎல் டிக்கெட்... சென்னையில் 8 பேர் கைது

தந்தி டிவி

சென்னையில் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ததாக 8 பேரை போலீசார் கைது செய்தனர்

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை சுற்றியுள்ள பட்டாபிராம் கேட், வாலாஜா சாலை, பெல்ஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில், ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக புகார் எழுந்தது. அதன் பேரில், திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, சட்ட விரோதமாக கள்ளச்சந்தையில் ஐபிஎல் கிரிக்கெட் விற்பனை செய்ததாக, 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, 8 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து14 டிக்கெட்டுகள்,18 ஆயிரத்து 800 ரூபாய் பணம் மற்றும் 3 செல்போன்கள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்