தற்போதைய செய்திகள்

முதலமைச்சர் கோப்பை போட்டியில் முறைகேடு..முன்னாள் மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் விசாரணை

தந்தி டிவி

சிவகங்கையில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை நடத்திய அப்போதைய மாவட்ட விளையாட்டு அலுவலர் கீதா, போட்டிகளில் தேர்வான வீரர்களுக்கு போலி ஆவணங்களை தயார் செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் அவர் 1 லட்சத்து 23 ஆயிரத்து 400 ரூபாயை கையாடல் செய்ததாக புகார் எழுந்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக தந்தி டிவியில் கடந்த மார்ச் மாதம் செய்தி ஒளிபரப்பு செய்யப்பட்டதை அடுத்து, மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறை, கீதாவுக்கு சம்மன் அனுப்பி இருந்தது. அதன்படி, சிவகங்கை லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் கீதா காலை 10 மணிக்கு ஆஜரானார். பிற்பகல் 2 மணி வரை நடைபெற்ற விசாரணையில், அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அவர் திணறியதாக கூறப்படுகிறது.

Breaking | High Court | TN Govt | "ஆதாரங்கள்..?" தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Breaking | TN Election | சட்டமன்ற தேர்தல் - வருமானவரித்துறை கட்டுப்பாட்டு அறை அமைப்பு

Breaking | India | Israel | இந்தியாவின் டெக்னாலஜி இஸ்ரேலில் - உலகை திரும்ப வைத்த மெகா ஒப்பந்தம்

BREAKING || விஜய்யின் அடுத்த பாய்ச்சல்? - எதிர்பாரா நேரம் களத்தை அதிரவிடும் அதிரடி பிளான்

Breaking | TN Election 2026 | தமிழக தேர்தல் தேதி | தலைமை தேர்தல் ஆணையர் முக்கிய அப்டேட்