தற்போதைய செய்திகள்

பட்டா கத்திகளோடு இன்ஸ்டா ரீல்ஸ்... ரவுடி போஸ் கொடுத்து வசமாக சிக்கிய இளைஞர்

தந்தி டிவி

பல்லாவரம் அருகே நானும் ரவுடிதான் என வடிவேல் பாணியில் ஏரியாவை கலக்க முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் மாரியம்மன் கோயில் தெருவை கோபாலகிருஷ்ணன் என்ற இளைஞர், ஒல்லியாக இருப்பதால் தன்னை யாரும் மதிக்கவில்லை எனவும், எப்படியாவது பெரிய ரவுடியாகிவிட்டால் தன்னுடைய நண்பர்கள் தன்னைப் பார்த்து பயப்படுவார்கள் எனவும் நினைத்து விதவிதமாக பட்டாகத்திகள் வாங்கி வைத்துகொண்டு இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்து வந்துள்ளார். பின்னர் ஒரு படி மேலே போய் போலீசாருக்கே தெரியாமல், போலீசாரின் வாகனங்களின் அருகே நின்றவாறு போட்டோ மற்றும் வீடியோக்களை எடுத்துள்ளார். இந்தநிலையில் அவர் தனது பிறந்தநாளையொட்டி, போலீஸ் வாகனத்தில் அருகே நிற்கும் வீடியோவுடன், பெரிய அளவிலான பட்டா கத்தியை பிடித்து நிற்பது போன்ற வீடியோக்களை இணைத்து சமூக வலைதளங்களில் பதிவிடவே, அவர் வசிக்கும் பகுதியினை சேர்ந்தவர்கள் இதுகுறித்து போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். வீடியோக்களை பார்த்து அதிர்ந்த போலீசார், கோபாலகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்