தற்போதைய செய்திகள்

ரீல்ஸ் எடுக்கும் போதே இன்ஸ்டா பிரபலத்தை இன்ஸ்டன்ட்டாக தட்டி தூக்கிய சென்னை போலீஸ்..! "உல்லாசமாக இருக்க..." பகீர் வாக்குமூலம்

தந்தி டிவி
• செங்கல்பட்டு மாவட்டத்தில் வீடு புகுந்து நகைகளை கொள்ளையடித்த இன்ஸ்டா பிரபலத்தை, இன்ஸ்டா ரீல்ஸ் எடுக்கும் போது போலீசார் கைது செய்தனர். • தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் சபாபதி. இவரின் மனைவி மாலதி. இவர்களின் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கதவை உடைக்காமலயே 3 சவரன் நகைகள் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டதாக போலீசில் புகாரளிக்கப்பட்டது. • இதனடிப்படையில் அருகில் உள்ள சிசிடிவியை காட்சிகளை சோதனை செய்த போலீசார், மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் அனிஷ்குமாரி என்ற பெண்ணை கைது செய்தனர். • அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முதலில் குற்றத்தை மறுத்த அனிஷ்குமாரி, பின்னர் ஒப்புக்கொண்டுள்ளார். இதில், இன்ஸ்டாவில் ரீல்ஸ் போடுவதால் வரும் வருமானம் போதவில்லை என்றும், உல்லாசமாக இருப்பதற்காக திருட்டில் இறங்கினேன் எனவும் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. • இதனிடையே, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சாலையில் நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தை -ல் விற்றதற்காக அனிஷ்குமாரி கைது செய்யப்பட்டதும் தெரியவர, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்