கடல் பரப்பில் பறக்கும் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன ஏவுகணையை, இந்திய கடற்படை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இந்திய கடற்படைக்கு சொந்தமான 'ஐ.என்.எஸ். மோர்முகமோ' போர் கப்பலில் இருந்து, இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை, சூப்பர் சோனிக் வேகமான மணிக்கு சுமார் ஆயிரத்து 200 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் இலக்கை, துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை படைத்தது.