தற்போதைய செய்திகள்

"போர் திணிக்கப்பட்டால் இந்தியா எதிர்கொள்ளும்" - ராஜ்நாத் சிங் அதிரடி

தந்தி டிவி

எல்லையில் ஏற்படும் எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக இருப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

அருணாசலப்பிரதேசம் சியாங்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், அங்கு 724 கோடி செலவில் ஏற்படுத்தப்பட்டிருந்த 27 திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், போரை ஆதரிக்கும் நாடு அல்ல இந்தியா, ஒரு வேளை போர் திணிக்கப்பட்டால் அதை எதிர்கொள்வோம் என்று பேசினார். நாட்டில் குறிப்பாக, வடக்கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பா.ஜ., சிறப்பாக செயல்பட்டு வருவதாக பெருமிதம் தெரிவித்த அவர், எல்லையில் ஏற்படும் எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக இருப்பதாக கூறினார். 

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"