தற்போதைய செய்திகள்

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்..கர்ப்பிணிக்கு காலாவதியான மாத்திரைகள்...அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

தந்தி டிவி

அங்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மயிலேறிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன் மாதந்திர சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்துள்ளார். மருத்துவர்கள் பரிசோதித்து மாத்திரை எழுதி கொடுத்துள்ளனர். அதைப்பெற்று அங்குள்ள மாத்திரை கவுண்டரில் மாத்திரை வாங்கியுள்ளார். வீட்டிற்கு வந்து பார்த்தபோது அது காலாவதியான மாத்திரை என தெரியவந்தது. இது குறித்து சுகாதார மையத்தில் இருந்த மருத்துவரிடம் கேட்டபோது, தற்காலிகமாக வந்துள்ளதாக தெரிவித்திருக்கிறார். ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் சுகாதார மையத்தில் காலாவதியான மாத்திரைகளை விநியோகம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்