தற்போதைய செய்திகள்

அக்னிபாத் திட்டத்தில்... வெளியானது அசத்தல் அறிவிப்பு

தந்தி டிவி

அக்னிபாத் திட்டத்தில் நிரந்தர பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு 25 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெலியாகி உள்ளது.

ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளிலும், 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சேரும் வீரர்களில், 25 சதவீதம் பேர் மட்டுமே 4 ஆண்டுகள் பணி நிறைவுக்குப் பிறகு நிரந்தரப் பணியாளர்களாக சேர்த்துக் கொள்ளபடுவார்கள். இந்நிலையில், நிரந்தரப் பணியாளர்களாக சேர்ப்பதை 25 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ராணுவத்தில் கடந்த 3 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள பணியாளர்களின் பற்றாக்குறையை ஈடுசெய்யும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வயது உச்ச வரம்பையும் 21-இல் இருந்து 23-ஆக உயர்த்த அரசு பரிசீலித்து வருகிறது. இந்த மாற்றங்கள் குறித்து இந்திய ராணுவம் விரைவில் பாதுகாப்பு அமைச்சகத்திடம் முன்மொழிவை அளிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Villupuram | Fire |திடீரென குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ- NH சாலையை முழுவதுமாக மூடிய கரும்புகை

Tollgate Price | சுங்கச்சாவடியில் கட்டண உயர்வு இன்று முதல் அமல் - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

JCD Prabhakar | ADMK MLA | ராஜினாமா செய்த 4 அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் பரபரப்பு நோட்டீஸ்

TN Govt | ``அவகாசம்'' - அரசாணை பிறப்பித்த தமிழக அரசு

Trichy Hospital Issue | நோயாளியை எலி கடித்த விவகாரம் - தூய்மை பணி ஒப்பந்ததாரருக்கு பறந்த உத்தரவு