தற்போதைய செய்திகள்

அக்னிபாத் திட்டத்தில்... வெளியானது அசத்தல் அறிவிப்பு

தந்தி டிவி

அக்னிபாத் திட்டத்தில் நிரந்தர பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு 25 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெலியாகி உள்ளது.

ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளிலும், 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சேரும் வீரர்களில், 25 சதவீதம் பேர் மட்டுமே 4 ஆண்டுகள் பணி நிறைவுக்குப் பிறகு நிரந்தரப் பணியாளர்களாக சேர்த்துக் கொள்ளபடுவார்கள். இந்நிலையில், நிரந்தரப் பணியாளர்களாக சேர்ப்பதை 25 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ராணுவத்தில் கடந்த 3 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள பணியாளர்களின் பற்றாக்குறையை ஈடுசெய்யும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வயது உச்ச வரம்பையும் 21-இல் இருந்து 23-ஆக உயர்த்த அரசு பரிசீலித்து வருகிறது. இந்த மாற்றங்கள் குறித்து இந்திய ராணுவம் விரைவில் பாதுகாப்பு அமைச்சகத்திடம் முன்மொழிவை அளிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Breaking | Annamalai | பதவி விலகலா? சமாதானமா? | டெல்லியில் யாரை சந்திக்கிறார் அண்ணாமலை?

Annamalai | CM Vijay | "தவெகவின் வெற்றி அண்ணாமலைக்கு புதிய பாதை.?" - புட்டு புட்டு வைத்த துரை கருணா

🔴LIVE :Annamalai | BJP | Modi | புதிய கட்சியா? | அண்ணாமலை சொன்ன பதில்

Annamalai | BJP | புது கட்சியா..? "இரண்டு நாளில்.." டெல்லி பறக்கும் முன் அண்ணாமலை பரபரப்பு பதில்

CM Vijay | Trichy | "இன்னமும் எலெக்‌ஷன் மோடில் CM விஜய்.. இதற்கெல்லாம் பதில் சொல்லி இருக்கணும்..''