குடியாத்தம் அருகே, காணாமல் போன செல்போனை தருவதாக கூறி அழைத்துவைத்து, செல்போன் உரிமையாளர் சுரேஷ்பாபுவை மர்ம நபர்கள் கட்டையால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுரேஷ்பாபு தனது புதிய சிம் எண்ணுக்கு அழைத்த போது, ஒருவர் போனை தருவதாகக் கூறி ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரும்படி கூறியுள்ளார். அதனை நம்பி நண்பருடன் சென்ற அவரை மர்ம நபர்கள் தாக்கி, கொண்டு வந்த செல்போனை தூக்கி வீசிவிட்டு தப்பியோடினர். இதில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.