தற்போதைய செய்திகள்

விதிகளை மீறி பேனர்கள் வைத்தால்..3 வருட சிறை தண்டனை..எச்சரிக்கை விடுத்த நகராட்சி நிர்வாகத்துறை

தந்தி டிவி

விதிகளை மீறி விளம்பரப் பலகைகள், பேனர்கள் வைத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகளின் படி, விளம்பரப் பலகைகள், பேனர்கள் உள்ளிட்டவை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிமம் பெறாமல் நிறுவக்கூடாது என்றும், உரிமக்காலம் முடிந்த பின்பும், விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பரப் பலகைகள், பேனர்கள் உள்ளிட்டவை அகற்றப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. பதாகை வைப்பது தொடர்பாக விதிகளை மீறி செயல்படும், நிறுவனம், தனி நபர், உள்ளிட்டோர் மீது மூன்று வருட சிறை தண்டனையோ அல்லது 25 ஆயிரம் அபராதமோ விதிக்கப்படும் எனவும், நகராட்சி நிர்வாகத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது....

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்