தற்போதைய செய்திகள்

விதிகளை மீறி பேனர்கள் வைத்தால்..3 வருட சிறை தண்டனை..எச்சரிக்கை விடுத்த நகராட்சி நிர்வாகத்துறை

தந்தி டிவி

விதிகளை மீறி விளம்பரப் பலகைகள், பேனர்கள் வைத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகளின் படி, விளம்பரப் பலகைகள், பேனர்கள் உள்ளிட்டவை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிமம் பெறாமல் நிறுவக்கூடாது என்றும், உரிமக்காலம் முடிந்த பின்பும், விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பரப் பலகைகள், பேனர்கள் உள்ளிட்டவை அகற்றப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. பதாகை வைப்பது தொடர்பாக விதிகளை மீறி செயல்படும், நிறுவனம், தனி நபர், உள்ளிட்டோர் மீது மூன்று வருட சிறை தண்டனையோ அல்லது 25 ஆயிரம் அபராதமோ விதிக்கப்படும் எனவும், நகராட்சி நிர்வாகத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது....

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்