தற்போதைய செய்திகள்

“ஒடிசா ரயில் விபத்தில் கணவர் பலி.!“.. இழப்பீடு தொகை கோரிய பெண் - ஒடிசா தலைமை செயலாளர் எச்சரிக்கை

தந்தி டிவி

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு தொகையை பெற சிலர் மோசடியில் ஈடுபட ஆரம்பித்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.

கட்டாக் மாவட்டத்தில் உள்ள மணிபண்டாவை சேர்ந்த கீதாஞ்சலி தத்தா என்பவர், ரயில் விபத்தில் தமது கணவர் பிஜய் தத்தா என்பவர் இறந்து விட்டதாகவும், உடலை அடையாளம் காட்டுவதாகவும் கூறியிருந்தார். ஆனால், ஆவணங்களை சரிப்பார்த்ததில், பொய்யான கோரிக்கை என்பது தெரிய வந்தது. இதனிடையே கணவர் பிஜய் தத்தா, மணியபந்த காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து பிரச்சனை தொடங்கியது. இருவரும் கடந்த 13 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருவதாவும் எனவே பொது பணத்தை அபகரிக்க முயன்றதாக

போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. பிரச்சனை பெரிதான நிலையில், கீதாஞ்சலி தலைமறைவாகி விட்டார். இதனிடையே து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் தலைமைச் செயலாளர் பிகே ஜெனா, உடல்கள் மீது போலி உரிமை கோருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கூறியுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்