மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 34 வயது பெண் ரீனா யாதவ் அழகு நிலையத்திற்கு செல்ல நினைத்துள்ளார். ஆனால் அவரது கணவர் பல்ராம் யாதவ் அதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில், ரீனா வீட்டில் தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் ரீனாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.