தற்போதைய செய்திகள்

குடிநீரில் மனிதக் கழிவு கலந்த விவகாரம் - புதிதாக 10 பேருக்கு டிஎன்ஏ சோதனை

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் வழக்கில், புதிதாக 10 பேருக்கு டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனை செய்ய வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் குடிநீரில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில், ஏற்கனவே 11 பேரின் ரத்த மாதிரி டிஎன்ஏ பரிசோதனை செய்வதற்கு உத்தரவிடப்பட்டிருந்த‌து. இதில், 3 பேருக்கு சோதனை செய்த நிலையில் எட்டு பேர் பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், புதிதாக 10 பேருக்கு டிஎன்ஏ மற்றும் ரத்த பரிசோதனை செய்ய புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு தாக்கல் செய்திருந்த‌து. இதை பரிசீலித்த நீதிபதி சத்யா, புதிதாக 10 பேருக்கு பரிசோதனை செய்ய அனுமதி அளித்து, பட்டியலை சென்னை பகுப்பாய்வு மையத்திற்கு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பினார். இந்த வழக்கில் 119 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை