தற்போதைய செய்திகள்

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதாதவர்கள் எத்தனை பேர்? - அமைச்சர் அன்பில் மகேஷ் பரபரப்பு பேட்டி

தந்தி டிவி

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின், முதல் நாள் தேர்வை 50 ஆயிரத்துக்கும் அதிமானவர்கள் எழுதவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் முதல் நாளிலேயே 50 ஆயிரம் மாணவர்கள் வரவில்லை என தேர்வுத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது . இது சர்ச்சையானதால் அடுத்தடுத்த நாட்களில் தேர்வுக்கு வராத மாணவர்களின் விவரங்களை தேர்வுத் துறை வெளியிடவில்லை. இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு 9 லட்சத்து 76 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 50 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், முதல் நாளில், ஒன்பது லட்சத்து 70 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வில் பங்கேற்றதாகவும், முழுமையான விவரங்கள் இன்னும் கிடைக்கப் பெறவில்லை என்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு