தற்போதைய செய்திகள்

"எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்" - மெரினாவுக்கு இப்படி ஒரு நிலைமையா..!

தந்தி டிவி

சென்னை மெரினா கடற்கரையில் அதிக அளவிலான குப்பைகள் தேங்கி கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அண்மையில் சென்னையில் பெய்த கனமழையால், அடையாறு, கூவம் ஆற்றில் அடித்து வரப்பட்ட குப்பைகள் கடலில் கலந்தன.

இவ்வாறு ஆற்றில் அடித்துவரப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள், தெர்மாகோல், மதுபாட்டில்கள் போன்றவை மெரினாவில் கரை ஒதுங்கியுள்ளன.

இதனால் மெரினா கடற்கரை குப்பை மேடு போல் காட்சியளிக்கிறது.

மெரினா கடற்கரையில் நேரத்தை செலவழிக்க வந்த சென்னைவாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடற்கரையில் தேங்கி கிடந்த குப்பைகளை பார்த்து முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா