தற்போதைய செய்திகள்

நிழலில் நிற்க சண்டை போடும் யானைகள்... அழிவுப் பாதையை நோக்கி செல்கிறதா இயற்கை

தந்தி டிவி
• நிழலில் நிற்பதற்கு காட்டு யானைகள் மோதிக் கொண்ட சம்பவம் இயற்கை அழிவுப் பாதையை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதை தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது. • கர்நாடக வனப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த 5 காட்டு யானைகள் ஓசூர் அருகே உள்ள சூதாளம் கிராமத்தில் ஆஞ்சநேயர் கோயில் அருகே உள்ள புங்கமரங்கள் அதிகம் நிறைந்த பகுதியில் முகாமிட்டுள்ளன. • இந்த யானைகளை 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தற்போது ஓசூரில் வழக்கத்திற்கு மாறாக வெயில் வாட்டி வரும் நிலையில், யானைகள் ஒதுங்க உயர்ந்த மரங்களில்லாமல் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளன. • நீண்ட நேரமாக வேகாத வெயிலில் அவை நின்ற நிலையில், ஒரு யானை மர நிழலில் இளைப்பாறிய போது, கோபத்தில் மற்றொரு யானை அதை தும்பிக்கையால் தள்ளி விட்டு தான் அந்த மர நிழலில் நிற்பதற்கு சென்றது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்