தற்போதைய செய்திகள்

"அமைச்சர் சேகர்பாபுவிற்கு நெஞ்சார்ந்த நன்றி" - திமுக எம்.எல்.ஏ பரந்தாமன்

தந்தி டிவி

தனது அலுவலக இடமாற்றத்திற்கும் அரசியல் முன்னேற்றத்திற்கும் பேருதவி புரிந்து வரும் அமைச்சர் சேகர்பாபுவிற்கு நெஞ்சார்ந்த நன்றி என எழும்பூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ பரந்தாமன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும், தன்னைத் தானே பெரிதாக விளம்பரப்படுத்தி கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத்தொலைவார்கள் என்ற முன்னாள் முதல்வர் கருணாநிதி-யின் உரையை பதிவிட்டு எதிர்ப்பைக் கண்டு துவளாமல், எதிரியைக் கண்டு அஞ்சாமல், இலட்சியப் பயணம் தொடர்வோம் என்றும் அவர் பதிவிட்டுள்ளார். அமைச்சர் சேகர்பாபு மற்றும் எழும்பூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ பரந்தாமன் இடையே மறைமுக கருத்து மோதல் இருந்து வருவதாக திமுக வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில் எம்.எல்.ஏ பரந்தாமனின் இந்த ட்விட்டர் பதிவு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு