தற்போதைய செய்திகள்

அரசு பேருந்து ஓட்டுநருக்கு ஹரியானா முதல்வர் பாராட்டு..!

தந்தி டிவி

ஹரியானாவில், பேருந்து பயணிகளுக்கு குடிநீர் வழங்கி சேவையாற்றும் ஓட்டுநருக்கு மாநில முதல்வர் பாராட்டு தெரிவித்துள்ளார். ஹரியானா மாநில போக்குவரத்து துறையில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் சுக்பிர் சோட்டிவாலா ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். சோனிபட்டிலிருந்து டெல்லி வழியாக சண்டிகருக்கு இயக்கப்படும் பேருந்தில் அவர் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர், பொது நோக்குடன் தனது பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கிளாஸில் தனது கைகளாலேயே தண்ணீர் ஊற்றி வழங்கி வருகிறார். இதற்கான முழு செலவையும் தமது சொந்த செலவிலேயே செய்து வருகிறார். ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார், ஓட்டுநர் சுக்பிர் சோட்டிவாலாவை பாராட்டியுள்ளார்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்