தற்போதைய செய்திகள்

அரசு பேருந்து ஓட்டுநருக்கு ஹரியானா முதல்வர் பாராட்டு..!

தந்தி டிவி

ஹரியானாவில், பேருந்து பயணிகளுக்கு குடிநீர் வழங்கி சேவையாற்றும் ஓட்டுநருக்கு மாநில முதல்வர் பாராட்டு தெரிவித்துள்ளார். ஹரியானா மாநில போக்குவரத்து துறையில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் சுக்பிர் சோட்டிவாலா ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். சோனிபட்டிலிருந்து டெல்லி வழியாக சண்டிகருக்கு இயக்கப்படும் பேருந்தில் அவர் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர், பொது நோக்குடன் தனது பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கிளாஸில் தனது கைகளாலேயே தண்ணீர் ஊற்றி வழங்கி வருகிறார். இதற்கான முழு செலவையும் தமது சொந்த செலவிலேயே செய்து வருகிறார். ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார், ஓட்டுநர் சுக்பிர் சோட்டிவாலாவை பாராட்டியுள்ளார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு