தற்போதைய செய்திகள்

அசுர வேகத்தில் மோதிய கார்.. சம்பவ இடத்திலேயே கணவன், மனைவி பலி - காரை சோதித்து ஷாக்கான போலீஸ்

தந்தி டிவி

கள்ளக்குறிச்சி அருகே சாலையை கடக்க முயன்ற தம்பதி கார் மோதி உயிரிழந்த சம்பவத்தில், காரில் இருந்து 500 கிலோ குட்கா கைப்பற்றப்பட்ட நிலையில் கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

சின்னசேலம் அருகே தென்தெராசலூர் கிராமத்தை சேர்ந்தவர் சாமிதுரை.

இவர் தன் மனைவி மலருடன் கள்ளக்குறிச்சி நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற இவர்கள் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில், படுகாயமடைந்த கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலயே உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதன் பின் நடத்தப்பட்ட விசாரணையில், காரில் 500 கிலோ குட்கா கடத்தி வரப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து, கார் ஓட்டுநர் முத்துலிங்கத்தை கைது செய்த போலீசார், தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.    

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை