தற்போதைய செய்திகள்

அசுர வேகத்தில் மோதிய கார்.. சம்பவ இடத்திலேயே கணவன், மனைவி பலி - காரை சோதித்து ஷாக்கான போலீஸ்

தந்தி டிவி

கள்ளக்குறிச்சி அருகே சாலையை கடக்க முயன்ற தம்பதி கார் மோதி உயிரிழந்த சம்பவத்தில், காரில் இருந்து 500 கிலோ குட்கா கைப்பற்றப்பட்ட நிலையில் கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

சின்னசேலம் அருகே தென்தெராசலூர் கிராமத்தை சேர்ந்தவர் சாமிதுரை.

இவர் தன் மனைவி மலருடன் கள்ளக்குறிச்சி நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற இவர்கள் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில், படுகாயமடைந்த கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலயே உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதன் பின் நடத்தப்பட்ட விசாரணையில், காரில் 500 கிலோ குட்கா கடத்தி வரப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து, கார் ஓட்டுநர் முத்துலிங்கத்தை கைது செய்த போலீசார், தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.    

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்