தற்போதைய செய்திகள்

பாதுகாப்புப்படை, பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்சூடு... பயங்கரவாதி சுட்டுக் கொலை

தந்தி டிவி

காஷ்மீரில் பண்டித் கொலையில் தொடர்புடைய பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.

புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், போலீசாரும், ராணுவமும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில், பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார்.

அவர் புல்வாமாவை சேர்ந்த அகிப் முஸ்தாக் பாட் என்றும், தொடக்கத்தில் ஹிஸ்புல் பயங்கரவாத அமைப்பில் இருந்த‌தாகவும், தற்போது டி.ஆர்.எஃப் அமைப்பில் இருப்பதாகவும் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.

மேலும், பண்டித் கொலையாளி கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்