தற்போதைய செய்திகள்

குஜராத் பால விபத்து... "கைதானவர்களுக்கு ஆதரவாக வாதாட மாட்டோம்" - வழக்கறிஞர்கள் அமைப்பு அதிரடி

தந்தி டிவி

குஜராத் மாநிலம் மோர்பியில் பாலம் இடிந்து விழுந்ததில் கைது செய்யப்பட்ட 9 பேர் சார்பாக ஆஜராகப் போவதில்லை என்று குஜராத்தில் உள்ள வழக்கறிஞர்கள் அமைப்பு முடிவு செய்துள்ளது.

மார்ச் மாதத்திலிருந்து புதுப்பிப்பதற்காக மூடப்பட்டிருந்த மோர்பியில் உள்ள பிரிட்டிஷ் கால தொங்கு பாலம் ஞாயிற்றுக் கிழமை இரவு இடிந்து விழுந்து பெரும் உயிர் சேதம் ஏற்பட்டது. குஜராத்தைச் சேர்ந்த ஓரேவா நிறுவனம் பாதுகாப்பு விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அதன் உயர்மட்ட அதிகாரிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்நிலையில், மோர்பி மற்றும் ராஜ்கோட் பார் அசோசியேஷன் இன்று காலை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி, இவ்விவகாரம் சம்பந்தமாக கைது செய்யப்பட்ட 9 பேருக்கு ஆதரவாக யாரும் வாதாடக் கூடாது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்