தற்போதைய செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு புகார்... "மறு தேர்வு நடத்தப்பட வேண்டும்" - அண்ணாமலை

தந்தி டிவி
• தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடுகள் இருந்தால் மறு தேர்வு நடத்தப்பட வேண்டும் என, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். • இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில், நில அளவர் தேர்வில், காரைக்குடி மையத்திலிருந்து 700 பேர் வெற்றி பெற்ற நிகழ்வின் பின்னணியில் விசாரணை நடத்த உள்ளதாக ஆணையம் தெரிவித்த நிலையில், குரூப் 4 தேர்வு முடிவுகளிலும் முறைகேடுகள் என்பது தமிழக இளைஞர்களை அவமதிப்பது போன்றது என அண்ணாமலை கூறியுள்ளார். • இது குறித்து தமிழக அரசு தீவிர விசாரணை நடத்தி, அரசுப் பணிக்காகக் காத்திருக்கும் பல்லாயிரம் இளைஞர்களுக்கான வாய்ப்பினை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்