தற்போதைய செய்திகள்

72 வயது முதியவருக்கு காதணி விழா நடத்திய பேரன், பேத்திகள் - நாமக்கல்லில் நெகிழ்ச்சி சம்பவம்

தந்தி டிவி

72 வயது முதியவருக்கு காதணி விழா நடத்திய பேரன், பேத்திகள் - நாமக்கல்லில் நெகிழ்ச்சி சம்பவம்

நாமக்கல் அருகே 72 வயது முதியவருக்கு உறவினர்கள் ஒன்றுகூடி, காதணி விழா நடத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்த வரதராஜன் என்ற 72 வயது முதியவர், மனைவி இறந்துவிட்ட நிலையில் மகன் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் முதியவர் வரதராஜனுக்கு சிறுவயதில் காதணி விழா நடைபெறாததை அறிந்த உறவினர்கள், அவருக்கு காதணி விழா நடத்தினர்.

நெருங்கிய உறவினர்கள், பேரன், பேத்திகள் என அனைவரும் ஒன்றுகூடி முதியவரின் காதணி விழாவில் கலந்து கொண்டு, அவருக்கு சீர் கொடுத்து மகிழ்ந்தனர்.

முதியவருக்கு பேரன் பேத்திகள் காதணி விழா நடத்திய நிகழ்ச்சி, அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்