தற்போதைய செய்திகள்

சாலையில் கிடந்த அரசு பள்ளி ஆசிரியர்...அமர்ந்த நிலையில் மர்ம மரணம் - தஞ்சாவூரில் அதிர்ச்சி

தந்தி டிவி

தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர், சாலையில் அமர்ந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேராவூரணி அருகே நாட்டரசன் கோட்டையை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவர் கொன்றைக்காடு பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து வந்த நிலையில், கடந்த 12 ஆம் தேதி முதல் பள்ளியில் விடுமுறை கூறி விட்டு, மதுபோதையில் நகரில் சுற்றிதிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஆலங்குடி அருகே சாலையில் அமர்ந்த நிலையில் வேலுச்சாமி உயிரிழந்ததை கண்டு பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்