தற்போதைய செய்திகள்

லஞ்சம் கேட்ட அரசு அதிகாரிகள்.. சிபிஐ எடுத்த கடும் நடவடிக்கை | bribes | CBI | Govt officers

தந்தி டிவி

சொத்துகளை மதிப்பீடு செய்ய லஞ்சம் கேட்ட வருமான வரித்துறை அதிகாரி மற்றும் ஆடிட்டர் என 2 பேரை சிபிஐ கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

வானகரத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் சொத்தை மதிப்பீடு செய்வதற்கு மூன்றரை லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட விவகாரத்தில் வருமானவரித்துறை மாவட்ட மதிப்பீட்டு அதிகாரி சஞ்சய் மற்றும் உதவி மதிப்பீட்டு அதிகாரி மஞ்சுநாதன், ஆடிட்டர் சத்குரு தாஸ், சொத்தின் உரிமையாளர் சுரேஷ் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனிடையே இந்த சம்பவத்தில் வருமான வரித்துறை அதிகாரி மஞ்சுநாதன் மற்றும் ஆடிட்டர் சத்குருதாஸை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இருவரின் வீடுகளில் நடத்திய சோதனையின் போது லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை