• கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், ஒரு கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பில் போடப்பட்ட சாலையில், மின் கேபிள் புதைக்க பள்ளம் தோண்டியதால், மின்சார துறை அதிகாரிகளுடன், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
• சிதம்பரம் அருகே ரயில்வே மேம்பாலம் இறக்கம் முதல் வரகூர்பேட்டை வரை உள்ள சாலை, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு கோடியே 46 லட்சம் செலவில் போடப்பட்டது.
• இந்நிலையில், மின் கேபிள் புதைக்கும் பணிகளுக்காக தோண்டியபோது, சாலை சேதம் அடைந்தது.
• இதனால், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், மின்சார துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.