தற்போதைய செய்திகள்

விபத்தை பொய்யாக சித்தரித்த வழக்கு - "அரசு வழக்கறிஞர் குற்றவாளி" நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

தந்தி டிவி
• காங்கேயம் அருகே மரத்தின் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். • ஆனால், லாரி மோதி விபத்து ஏற்பட்டதாக சித்தரித்து காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். • மேலும், விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு இழப்பீடு கேட்டு திருப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. • இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரித்தபோது, பொய் வழக்கு என தெரியவந்தால், வழக்குப் பதிவு செய்த அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமார், வழக்கறிஞர் தங்கமணி, லாரி டிரைவர் மாணிக்கம் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். • விசாரணை காலத்தில் இன்ஸ்பெக்டர் சுகுமார் இறந்துவிட்ட நிலையில், லாரி டிரைவர் மாணிக்கம், வழக்கறிஞர் தங்கமணிக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. • இந்த தண்டனையை எதிர்த்து, அவர்கள் இருவரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அவர்களின் தண்டனையை உறுதிசெய்தது. • இதையடுத்து, அரசு வழக்கறிஞர் பதவியை தங்கமணி ராஜிநாமா செய்து, திருப்பூர் ஆட்சியரிடம் கடிதத்தை கொடுத்தார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி