தற்போதைய செய்திகள்

"உறுப்பினரை நீக்க பொதுக்குழுவுக்கு அதிகாரமில்லை"-உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு வாதம்..!

தந்தி டிவி
• கட்சியின் கொள்கைகளை வகுக்கும் உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழுவுக்கு, உறுப்பினரை கட்சியில் இருந்து நீக்க அதிகாரம் வழங்கப்படவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் தரப்பு வாதிட்டுள்ளது. • அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது. • அப்போது வாதிட்ட ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ஓபிஎஸ்-யை கட்சியில் இருந்து நீக்கும் போது கட்சியின் சட்ட விதிகளை பின்பற்றவில்லை என்பதை தனி நீதிபதி ஒப்புக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். • உறுப்பினரை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் பொதுக்குழுவுக்கு வழங்கப்படவில்லை எனக் வாதிட்ட ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர், • உரிய நடைமுறையை பின்பற்றவில்லை என வழக்கு தொடர்ந்ததற்காக, உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக எப்படி கூற முடியும் என கேள்வியை எழுப்பினார். • கட்சியில் இருந்து நீக்கியதால் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட முடியாமல் ஈடுசெய்ய முடியாத இழப்பை ஓபிஎஸ் எதிர்க்கொண்டிருப்பதாகவும் வாதிட்டார். இன்று வெள்ளிக் கிழமையும் ஓபிஎஸ் தரப்பு வாதாடவுள்ளது

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை