தற்போதைய செய்திகள்

"உறுப்பினரை நீக்க பொதுக்குழுவுக்கு அதிகாரமில்லை"-உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு வாதம்..!

தந்தி டிவி
• கட்சியின் கொள்கைகளை வகுக்கும் உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழுவுக்கு, உறுப்பினரை கட்சியில் இருந்து நீக்க அதிகாரம் வழங்கப்படவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் தரப்பு வாதிட்டுள்ளது. • அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது. • அப்போது வாதிட்ட ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ஓபிஎஸ்-யை கட்சியில் இருந்து நீக்கும் போது கட்சியின் சட்ட விதிகளை பின்பற்றவில்லை என்பதை தனி நீதிபதி ஒப்புக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். • உறுப்பினரை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் பொதுக்குழுவுக்கு வழங்கப்படவில்லை எனக் வாதிட்ட ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர், • உரிய நடைமுறையை பின்பற்றவில்லை என வழக்கு தொடர்ந்ததற்காக, உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக எப்படி கூற முடியும் என கேள்வியை எழுப்பினார். • கட்சியில் இருந்து நீக்கியதால் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட முடியாமல் ஈடுசெய்ய முடியாத இழப்பை ஓபிஎஸ் எதிர்க்கொண்டிருப்பதாகவும் வாதிட்டார். இன்று வெள்ளிக் கிழமையும் ஓபிஎஸ் தரப்பு வாதாடவுள்ளது

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்