தற்போதைய செய்திகள்

"உறுப்பினரை நீக்க பொதுக்குழுவுக்கு அதிகாரமில்லை"-உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு வாதம்..!

தந்தி டிவி
• கட்சியின் கொள்கைகளை வகுக்கும் உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழுவுக்கு, உறுப்பினரை கட்சியில் இருந்து நீக்க அதிகாரம் வழங்கப்படவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் தரப்பு வாதிட்டுள்ளது. • அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது. • அப்போது வாதிட்ட ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ஓபிஎஸ்-யை கட்சியில் இருந்து நீக்கும் போது கட்சியின் சட்ட விதிகளை பின்பற்றவில்லை என்பதை தனி நீதிபதி ஒப்புக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். • உறுப்பினரை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் பொதுக்குழுவுக்கு வழங்கப்படவில்லை எனக் வாதிட்ட ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர், • உரிய நடைமுறையை பின்பற்றவில்லை என வழக்கு தொடர்ந்ததற்காக, உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக எப்படி கூற முடியும் என கேள்வியை எழுப்பினார். • கட்சியில் இருந்து நீக்கியதால் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட முடியாமல் ஈடுசெய்ய முடியாத இழப்பை ஓபிஎஸ் எதிர்க்கொண்டிருப்பதாகவும் வாதிட்டார். இன்று வெள்ளிக் கிழமையும் ஓபிஎஸ் தரப்பு வாதாடவுள்ளது

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு