தற்போதைய செய்திகள்

15 நாட்களாக இயங்காமல் நிற்கும் குப்பை வண்டிகள் - நோய்த்தொற்று பரவும் என மக்கள் வேதனை

தந்தி டிவி

காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூர் ஊராட்சிமன்ற தலைவர், நிதி வரம்பிற்கு மேல் தன்னிச்சையாக செலவு செய்துள்ளதாக கூறி, அவர் காசோலைகளில் கையெழுத்திட மாவட்ட ஆட்சியர் தற்காலிக தடை விதித்தார்.

இதனால் கடந்த 15 நாட்களாக குப்பை அள்ளும் பேட்டரி வாகனங்கள் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதன்காரணமாக அப்பகுதியில் ஏராளமான குப்பைகள் தேங்கி உள்ளதால், நோய்த்தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு