தற்போதைய செய்திகள்

வீடு புகுந்து LED டி.வி-யை நேக்கா திருடிய கும்பல் - அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

தந்தி டிவி

கோவை அருகே, பட்டப் பகலில் வீடு புகுந்து, எல்இடி டிவி மற்றும் 3 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.சூலூர் அருகே உள்ள முத்து கவுண்டம்புதூர் பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவர், உறவினரை பார்க்க குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு திரும்பியபோது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் இருந்த எல்இடி டிவி, லேப்டாப், 3 சவரன் தங்க நகை காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, 3 பேர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பான விசாரணையில், கணேசன், தினேஷ், சுப்பிரமணி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து எல்இடி டிவி மற்றும் 3 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்