தற்போதைய செய்திகள்

நாகூர் தர்காவில் கந்தூரி விழா - வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் மினாராக்கள்

தந்தி டிவி

உலகப்புகழ்பெற்ற நாகூர் தர்காவில் கந்தூரி விழாவை முன்னிட்டு, மினாராக்கள் வண்ண விளக்குகளால் ஜொலித்து வருகின்றன.

நாகூர் தர்காவில், 466-ஆம் ஆண்டு கந்தூரி விழா தொடங்கியதை அடுத்து, தர்காவில் உள்ள 5 மினாராக்கள், அலங்கார வாசல், ஆண்டவர் கோபுரம் ஆகியவை வண்ண விளக்குகளால் ஜொலிக்கின்றன. இதனால், நாகூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. தர்காவில் நாளை கொடியேற்று வைபவமும், அதனைத் தொடர்ந்து வரும் 2-ஆம் தேதி நாகையில் இருந்து சந்தனக் கூடு ஊர்வலமும், 3-ஆம் தேதி அதிகாலை பெரிய ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்வும் நடைபெற உள்ளது. இதனால், தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருவதால், முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு