தற்போதைய செய்திகள்

5-ஆம் தேதி முதல்...அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஆவின் | Aavin Company | Aavin Products

தந்தி டிவி

ஆவின் நிறுவனம் நாளொன்றுக்கு 4 லட்சத்து 20 ஆயிரம் உற்பத்தியாளர்களிடம் இருந்து 40 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்து வருகிறது.

கடந்த 19.08.2019 முதல், பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 32 ரூபாயாகவும், எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 41 ரூபாயாகவும் வழங்கப்பட்டு வருகிறது.

இடுபொருள் விலையேற்றம், உற்பத்தி செலவினம் கூடியுள்ளதால், கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று, பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்படுகிறது.

அதன்படி, பசும்பால் கொள்முதல் விலை 32 ரூபாயில் இருந்து 35 ரூபாயாகவும், எருமைப்பாலின் கொள்முதல் விலை 41 ரூபாயில் இருந்து 44 ரூபாயாகவும் உயர்த்தப்படுகிறது.

இதனால், 4 லட்சத்து 20 ஆயிரம் உற்பத்தியாளர்கள் நேரடியாகப் பலனடைவார்கள் என்று ஆவின் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் கூறியுள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்