தற்போதைய செய்திகள்

சுந்தர் பிச்சை முதல் அமேசான் சி.இ.ஓ வரை... டாப் CEOக்களுடன் பேசிய பிரதமர் மோடி

தந்தி டிவி

அமெரிக்காவில் பிரதமர் மோடியை கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பை தொடர்ந்து சுந்தர் பிச்சை பேசுகையில், இந்தியாவில் டிஜிட்டல் மயமாக்கலுக்காக, இந்தியாவில் கூகுள் நிறுவனம் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்போவதாக தெரிவித்தார். மேலும், பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா நோக்கம் மற்ற நாடுகளுக்கு, ஒரு வரைபடம் போன்றது எனவும் புகழாரம் சூட்டினார்.

அமெரிக்காவில், பிரதமர் மோடியை அமேசான் நிறுவன சி.இ.ஒ. ஆண்ட்ரூ ஜாஸி சந்தித்தார். இதையடுத்து, இந்தியாவில் பல்வேறு வேலைவாய்ப்புகளை அமேசான் நிறுவனம் உருவாக்கவுள்ளதாக, அதன் சி.இ.ஒ. தெரிவித்தார். மேலும், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்களை டிஜிட்டல் மயமாக்கி உலக அளவில் வர்த்தகம் செய்ய ஆர்வம் காட்டுவதாகவும் கூறினார்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்