தற்போதைய செய்திகள்

சுந்தர் பிச்சை முதல் அமேசான் சி.இ.ஓ வரை... டாப் CEOக்களுடன் பேசிய பிரதமர் மோடி

தந்தி டிவி

அமெரிக்காவில் பிரதமர் மோடியை கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பை தொடர்ந்து சுந்தர் பிச்சை பேசுகையில், இந்தியாவில் டிஜிட்டல் மயமாக்கலுக்காக, இந்தியாவில் கூகுள் நிறுவனம் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்போவதாக தெரிவித்தார். மேலும், பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா நோக்கம் மற்ற நாடுகளுக்கு, ஒரு வரைபடம் போன்றது எனவும் புகழாரம் சூட்டினார்.

அமெரிக்காவில், பிரதமர் மோடியை அமேசான் நிறுவன சி.இ.ஒ. ஆண்ட்ரூ ஜாஸி சந்தித்தார். இதையடுத்து, இந்தியாவில் பல்வேறு வேலைவாய்ப்புகளை அமேசான் நிறுவனம் உருவாக்கவுள்ளதாக, அதன் சி.இ.ஒ. தெரிவித்தார். மேலும், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்களை டிஜிட்டல் மயமாக்கி உலக அளவில் வர்த்தகம் செய்ய ஆர்வம் காட்டுவதாகவும் கூறினார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு