தற்போதைய செய்திகள்

மக்களுக்கு உதவுவது போல் மோசடி..ATM-ல் நடந்த பகீர் சம்பவம்..புதுக்கோட்டை அருகே பரபரப்பு

தந்தி டிவி

புதுக்கோட்டையில், ஏ.டி.எம். மையத்தில் மோசடியாக பணம் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். திருமயம் அருகே பொன்னமராவதியில் செயல்படும் எஸ்.பி.ஐ ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க தெரியாமல் தடுமாறும் பொதுமக்களுக்கு உதவி செய்வது போல், ஏ.டி.எம். கார்டை மாற்றி மர்ம நபர்கள் பணம் திருடுவதாக புகார் எழுந்தது. இதன்பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடிய மதுரை பாலமேடு பகுதியைச் சேர்ந்த சரவணகுமாரை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். பலரிடம் மோசடி செய்தது தெரியவந்ததை அடுத்து சரவணக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்