தற்போதைய செய்திகள்

2 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவரை கண்டுபிடித்து உறவினரிடம் ஒப்படைத்த போலீசார்... குவியும் பாராட்டு

தந்தி டிவி

தூத்துக்குடியில் 2 வருடங்களுக்கு முன்பு காணாமல் போனவரை கண்டுபிடித்து, உறவினரிடம் ஒப்படைத்த போலீசாரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.

https://youtu.be/cDNhqeGEJLEதூத்துக்குடியில் காணாமல் போனவர்கள் பற்றிய வழக்குகளை ஆய்வு செய்து அவர்களை கண்டுபிடிக்க, குற்றம் மற்றும் குற்றவாளிகள் கண்காணிப்பு இணையதள பிரிவின் மூலம் விசாரணை நடைபெற்றது. முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பு இல்லங்களில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் நாசரேத்தில் உள்ள

மனநலம் பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பு இல்லத்தில், 2 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன, சிவகங்கையை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ராஜ்குமாரை மீட்ட போலீசார், அவரது சகோதரியிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். காணாமல் போனவரை கண்டுபிடித்து ஒப்படைத்த போலீசாருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்