தற்போதைய செய்திகள்

2 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவரை கண்டுபிடித்து உறவினரிடம் ஒப்படைத்த போலீசார்... குவியும் பாராட்டு

தந்தி டிவி

தூத்துக்குடியில் 2 வருடங்களுக்கு முன்பு காணாமல் போனவரை கண்டுபிடித்து, உறவினரிடம் ஒப்படைத்த போலீசாரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.

https://youtu.be/cDNhqeGEJLEதூத்துக்குடியில் காணாமல் போனவர்கள் பற்றிய வழக்குகளை ஆய்வு செய்து அவர்களை கண்டுபிடிக்க, குற்றம் மற்றும் குற்றவாளிகள் கண்காணிப்பு இணையதள பிரிவின் மூலம் விசாரணை நடைபெற்றது. முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பு இல்லங்களில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் நாசரேத்தில் உள்ள

மனநலம் பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பு இல்லத்தில், 2 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன, சிவகங்கையை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ராஜ்குமாரை மீட்ட போலீசார், அவரது சகோதரியிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். காணாமல் போனவரை கண்டுபிடித்து ஒப்படைத்த போலீசாருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ